கொங்கு மண்டலத்தில் ஒரு சமுதாய மக்களின்உறவுகளை பல நூறு ஆண்டுகளாக கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு ஊஞ்சல். மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு , பெண்மையை போற்ற வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாக சொல் லப்படும் இந்த ஊஞ்சல் , அனைவரின் வணக்கத் திற்கும் உரியதாக இருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறத.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சங்கரண்டாம்பாளையம் கிராமம் . இங்கு மார்கழி மாதம் திருவாதிரை நாளில் பெரிய குலக் கன் னியர்க்கு பொன் ஊஞ்சல் திருக்கல்யாணச் சீர் செய்யப்படுகிறது . இந்த நிகழ்ச்சி பல நூறு ஆண்டு களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . கொங்கு வேளாளர்களில் பெரியன் குலத்தினர் மட்டுமே கடைபிடித்து வருகின்றனர்